தேர்தல் என்றாலே தி. மு. க. வுக்கு பயம் வந்துவிடும்?

Photo of author

By CineDesk

தேர்தல் என்றாலே தி. மு. க. வுக்கு பயம் வந்துவிடும்?

CineDesk

15-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்க படுகிறது சுனாமியால் இறந்த மீனவர்களுக்கு அவரது உறவினர்கள் மெழுகுபத்தி ஏந்தியும் கடற்கரையில் பால் ஊற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.

அப்போது அமைச்சர் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது நமது அ.தி.மு.க. அரசுதான் என்றும்.

மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செய்யவில்லை என கூறினார்.

தேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது காலம் காலமாக தி.மு.க. வின் வழக்கம் என கூறினார்.