சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன?

0
225

சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல்வேறு கோயில்களின் நடை சாத்தப்பட்டன.

இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்ட நிலையில் வருகிற அதிகாலை 3 மணி முதல் நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை திறந்து இருந்தது. தொடர்ந்து பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு. 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடைபெற்றதாக தெரிவிக்கபட்டது. ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விசே‌ஷ தீபாராதனை காட்டப்பட்டது . நாளை 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறும்.

இதே போல் பிரசித்திபெற்ற விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி, நாள்தோறும் அதிகாலை 4 மணி முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று சூரிய கிரகணம் என்பதால், கோயில் நடை சாத்தப்பட்டது.மாலை 4 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கற்பக விநாயகர் கோயில் நடையும் சாத்தப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது.

சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நடையும் அடைக்கப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்னர் நடை திறக்கப்பட்டது.

Previous articleதேர்தல் என்றாலே தி. மு. க. வுக்கு பயம் வந்துவிடும்?
Next articleமுந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here