டி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்!
தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.மேலும் மக்கள் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றது.
இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் டி.எம்.ஆர்சி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் தீபாவளி பண்டிகை அன்று அனைத்து மெட்ரோ ரயில் நிலைய சந்திப்புகளில் இருந்து திங்கட்கிழமை இரவு கடைசி ரயில் 11 மணிக்கு புறப்படும். மேலும் திங்கட்கிழமை மெட்ரோ ரயில்களின் சேவை வழக்கமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.