உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

0
88
#image_title

உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க கல் உப்பு பரிகாரத்தை செய்யுங்கள்..!!

இந்த உலகில் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது.
நாம் வாழ வேண்டும் என்றால் கையில் பணம் இருக்க வேண்டும். இந்த பணத்தின் வரவை அதிகரிக்க, பணம் கையில் தங்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் கல் உப்பு பரிகாரம் செய்தால் பணம் எப்பொழுதும் கையில் தங்கும்.

கல் உப்பு பரிகாரம் செய்யும் முறை…

1 கைப்பிடி அளவு கல் உப்பை நல்ல தண்ணீரில் கலக்கி கொள்ளவும். பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். நீங்கள் பயன்படுத்தும் பாத்திரம் இரும்பால் ஆன பாத்திரமாக இருக்கக் கூடாது.

ஊற்றியப் பின்னர் ஐந்து விரல்களை அதில் மூழ்குவது போல் வைத்து பின்னர் வெளியே எடுக்கவும். எவ்வாறு 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து செய்யவும்.

இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறைவதோடு உங்கள் கர்மவினைகள் காலப்போக்கில் சரியாகிவிடும்.

பிறகு இந்த கல் உப்பு தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை உப்பு பரிகாரம் செய்வதன் மூலம் பணம் கையில் தங்கும்.

அதேபோல் பெரு விரல் மற்றும் ஆள்காட்டி விரல் தொடுவது போல் வைத்து பணத்தை பிறருக்கு கொடுக்கவும், வாங்கவும் செய்தால் உங்களிடம் பணப் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.