கையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

0
209
#image_title

கையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

நவீன உலகில் குடும்பச் செலவுகளை சமாளிப்பதே கடும் சவாலாக இருக்கின்றது. காரணம் விலைவாசி உயர்வு. இவ்வாறு இருக்க நாம் பணத்தை சேமிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாம் வாங்கும் ஊதியம் அன்றாட செலவிற்கு மட்டுமே போதுமானதாக இருக்கையில் அதை அதிகளவு சேமிக்க ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது.

அந்த வகையில் பணத்தை எளிதில் சேமிக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை வாரம் ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் கையில் பணம் புரளும்.

இதற்கு முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்னர் சிறிது வில்வ இலையை கொண்டு மாலையாக கோர்த்து பூஜை அறையில் உள்ள சிவன் படத்திற்கு மலையாக போடவும்.

அதன் பின்னர் சாம்பிராணியில் வீடு முழுவதும் தூப தீபம் காட்டவும். பிறகு சாமந்தி பூவில் மாலை கோர்த்து சிவன் படத்திற்கு போட்டு பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வர நிச்சயம் பண வரவு அதிகரிக்கும்.