பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

0
37
#image_title

பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!

சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் பல விதமான விஷயங்களையும் பாதித்து அனைத்திற்கும் தடையாக இருக்கும்.

பல வகையான சாபங்களில் இந்த 11 சாபங்கள் மிகவும் பாதிப்புகள் தரக் கூடியவை. அவை பெண் சாபம், பித்ரு சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், கங்கா சாபம், விருக்க்ஷ சாபம், தேவ சாபம், முனி சாபம், ரிஷி சாபம், குல தெய்வ சாபம் ஆகியவை.

இப்படி ஏதும் சாபம் நமக்கு இருக்கிறதோ என்று ஜாதகத்தின் மூலமோ அல்லது வேறு விதத்திலோ கண்டறிந்து அதிலுருந்து விடுபட வேண்டும்.

பசு(கோ) சாபம்: ஏன் நம்மைத் தொடர்கிறது…

நம் முன்னோர்கள் இதை செய்து இருந்தாலும் சாபம் நம்மை பாதிக்கும்.

பசுவைத் துன்புறுத்தல், அதை வதை செய்தல், கன்றை தாயிடம் இருந்து பிரித்தல், அடி மாட்டிற்கு அனுப்புதல், பசுவை நீருக்காகவும், உணவுக்காகவும் அலைய விடுதல் ஆகியவை.

பசு சாபம்: என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..

வம்சத்திற்கு, தலைமுறைக்கு வளர்ச்சி தரவே தராது.

பசுவின் சாபத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

பசுவிற்கு உணவு தானம் செய்ய வேண்டும். கோ பூஜை செய்வது, குல தெய்வ வழிபாடு செய்வது, நந்தி, காமதேனு வழிபாடு செய்வது – எது செய்தாலும் மனதார மன்னிப்பு கேட்பது அவசியம்.

நாம் செய்து இருந்தாலும் நம் முன்னோர்கள் செய்து இருந்தாலும் அவர்கள் சார்பில் நாம் மன்னிப்பு கேட்பது அவசியம். இவ்வாறு செய்தால் கோ சாபத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.