நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

0
122
#image_title

நீங்கள் வைத்திருக்கும் தங்கம் அடகு கடைக்கு போகாமல் இருக்க இவ்வாறு செய்யுங்கள்!

பரிகாரம் 01…

குங்குமம், மஞ்சள் கிழங்கு, துளசி வாங்கி நகை இருக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். இந்த நகைப்பெட்டியை பூஜை அறையில் வைத்து 2 மணி நேரம் கழித்து அதை எடுத்து சிறிது மஞ்சள் தண்ணீர் தெளித்து பீரோவில் வைக்கவும்.

பின்பு வெள்ளிக்கிழமை அன்று ஒரு மஞ்சள் துணியில் 5 கிராம்பு, 5 ஏலக்காய், 5 சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைத்து முடிச்சு போட்டு நகை இருக்கும் இடத்தில் வைத்து விடவும்.

நகையுடன் வைத்துள்ள பொருட்களை மாதம் ஒருமுறை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நிச்சயம் தங்கம் அடகு கடைக்கு போகாமல் வீட்டில் தங்கும்.

பரிகாரம் 02…

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பித்தளைத் தட்டில் வீட்டில் உள்ள எதாவது ஒரு தங்க நகைகளை வைத்து பூக்கள் வைத்து அலங்கரித்து தூப தீபம் காட்டி வழிபடவும்.

ஒரு மணி நேரம் கழித்து நகை வைக்கும் போது 3 கிராம்பு, 3 ஏலக்காய், சிறிது துளசி இலைகளை சேர்த்து நகையை வைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தங்கம் வீட்டில் தங்கும்.