எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

Photo of author

By Divya

எந்நேரமும் வயிறு எரிச்சலா இருக்கா? அப்போ குடிக்கும் மோரில் இது ஒன்னு சேர்த்துக்கோங்க!!

Divya

சிலருக்கு உணவு சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் வயிறு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.இந்த வயிறு எரிச்சல் உணர்வு குணமாக மோரில் கற்றாழை துண்டுகளை போட்டு குடிக்கலாம்.

வயிறு எரிச்சல் வர காரணங்கள்:

*அல்சர்
*கார உணவுகள்
*உணவு உட்கொள்ளாமை
*சூடான உணவுகள்

வயிறு எரிச்சலை குணமாக்கும் வீட்டு வைத்தியங்கள்:

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை துண்டுகள் – ஒரு கப்
2)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
3)மோர் – முக்கால் கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

பிறகு கெட்டி தயிர் கால் கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை மிக்சர் ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை தயாரித்து வைத்துள்ள மோரில் போட்டு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து ஊறவைத்த பாதாம் பிசினை அதில் போட்டு கலந்து பருகுங்கள்.உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த பானத்தை பருக வேண்டும்.மோரில் இந்த பொருட்களை போட்டு பருகி வந்தால் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)புதினா இலைகள் – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அதில் 10 புதினா இலைகளை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

இந்த புதினா பானத்தை வடித்து தேன் கலந்து பருகி வந்தால் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும்.