காய்ச்சல் மாத்திரை உங்கள் வீட்டில் உள்ளதா? இனி கவலையை விடுங்கள் எலி தொல்லையை இருக்காது!!

0
137
#image_title

காய்ச்சல் மாத்திரை உங்கள் வீட்டில் உள்ளதா? இனி கவலையை விடுங்கள் எலி தொல்லையை இருக்காது!!

வீட்டில் எலித் தொல்லை அதிகம் இருப்பதால் அதிலிருந்து விடுபட பலவித மருந்துகளை பயன்படுத்தியும் பயனில்லாமல் போயிருக்கும். அதனால் எலித் தொல்லையிலிருந்து விடுபட சிறப்பான ஒரு வழிமுறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

இதை செய்ய தேவையான பொருட்கள்

* காய்ச்சல் மாத்திரை

* கோதுமை மாவு

* எலி விரும்பி திண்ணக்கூடிய பொருட்கள் (எ.கா கருவாடு)

செய்முறை

முதலில் மூன்று ஸ்பூன் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்கு பிசைய வேண்டும். பிறகு காய்ச்சல் மாத்திரைகளில்(டோலோ, பேரசிட்டமால்) இரண்டு மாத்திரையை எடுத்து நன்றாக பொடி செய்து அதையும் அந்த கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை சிறிய வட்டவடிவமாக பந்து போல செய்து வீட்டில் எலி இருக்கும் இடத்தில் அல்லது எலிகள் எந்த இடத்தில் அதிகம் வருமோ அங்கு வைக்கவும். அடுத்த நாள் எலிகள் உங்கள் வீட்டிலேயே இருக்காது. முக்கியமாக இதை செய்து வைத்தபின் அதை சுற்றி தண்ணீர் எதுவும் வைக்க கூடாது. அதாவது எலி குடிக்கும் அளவு தண்ணீர் எந்த இடத்திலும் வைக்க கூடாது.

அது மாதிரியே வீட்டில் குழந்தைகளுக்கு எட்டும் இடத்தில் இதை வைக்க கூடாது. வீட்டில் மட்டுமல்ல வயல்களித் எலித் தொல்லை இருந்தாலும் இதை பயன்படுத்தலாம். ஈது மட்டுமில்லாமல் எலித் தொல்லை எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் இந்த மருந்தை வைத்தால் இனி எலித் தொல்லையே கிடையாது.