‘பாரத்’ குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு தெரிவித்த பதில் என்ன தெரியுமா? அட இது நல்லா இருக்கே!!

0
37
#image_title

‘பாரத்’ குறித்த கேள்விக்கு செல்லூர் ராஜு தெரிவித்த பதில் என்ன தெரியுமா? அட இது நல்லா இருக்கே!!

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள்,மாவட்ட செயலாளர்கள்,அதிமுக மதுரை மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களை சந்தித்தார்.அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து நிருபர்கள் கேள்விக்கு பல்வேறு முக்கிய தகவல்களை கூறினார்.

இதனை தொடர்ந்து மத்திய அரசு நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற உங்களுக்கு சம்மதமா? உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு செல்லூர் ராஜூ எனக்கு “இந்தியா” தான் பிடிக்கும்.ஆனால் இந்தியா அல்லது பாரத் இதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என தனது கருத்தை தெரிவித்தார்.

ஒருவேளை இந்தியாவிற்கு பதில் ‘பாரத்’ என நாட்டின் பெயர் மாற்றப்பட்டால்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயர் பாரத் என மாற்றப்படுமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக உள்ளதே இது.அவை நடக்கும் நடக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று பதில் அளித்தார்.

author avatar
CineDesk