இந்த உலகில் தீவிர நோயாக இருக்கும் கேன்சர் மாரடைப்பிற்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.இந்த கேன்சரால் வருடந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.இந்த கேன்சர் உடல் உறுப்புகளில் தோன்றி மெல்ல மெல்ல மரணத்தை கொடுக்கும்.
புற்றுநோய் வகைகள்:
நுரையீரல் புற்றுநோய்
கணைய புற்றுநோய்
மூளை புற்றுநோய்
வாய் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்
குடல் புற்றுநோய்
தொண்டை புற்றுநோய்
பொதுவாக எந்தஒரு புற்றுநோய் பாதிப்பையும் ஆரம்ப நிலையில் கண்டறிய முடியாது.இதன் காரணமாகவே உயிரிழப்பை தடுக்க முடியாமல் போய்விடுகிறது.ஆனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து புற்றுநோய் அபாயத்தை நம்மால் நிச்சயம் கண்டறிய முடியும்.
உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டையில் வலி இருப்பின் அது ஒரு புற்றுநோய்க்கான அறிகுறி என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் தோள்பட்டை வலி நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.கழுத்து வலி,தோள்பட்டை வலிக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது.
நுரையீரல் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டால் அது தோள்பட்டையில் கடுமையான வலியை ஏற்படுத்தும்.நுரையீரல் புற்றுநோயால் இரத்த நாளங்களில் அழுத்தம் உண்டாகி தோள்பட்டை வலி ஏற்படும்.எனவே உங்களுக்கு அடிக்கடி தோள்பட்டை வாலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்:
தொடர் இருமல்
நிமோனியா
மூச்சுத் திணறல்
தொண்டை வலி
மார்பு வலி
எடை இழப்பு
நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காரணங்கள்:
புகைப்பழக்கம்
காற்றுமாசுபாடு
பரம்பரைத் தன்மை
மார்பு புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.தூய்மையான காற்றை சுவாசிக்க வேண்டும்.மூலிகை பானம் செய்து பருகி வந்தால் நுரையீரலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.தினமும் ஒரு கிளாஸ் மஞ்சள் நீர் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.