நின்று கொண்டு தண்ணீர் பருகலாமா?
தினசரி 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்கலா என்பதில் சந்தேகம்தான். அதிலும் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினால் பல விளைவுகளை சந்திக்க கூடும்.
தண்ணீர் குடிக்கும் போது நிற்க கூடாது என கூறுகின்றனர். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் வயிற்றுக்கு அதி வேகமாக சென்று பல்வேறு உபாதைகளை சந்திக்க நேரிடும்.
முதலாவதாக இரைப்பை குடல் பாதிப்பு:
நின்று கொண்டு தண்ணீர் அருந்தும் போது அது குடலுக்கு நேராக செல்வதால் அதன் மேற்புறம் மிகவும் பாதிப்பை சந்திக்க கூடும். இதனால் குடல் பாதை என அனைத்தும் பாதிக்கப்படும். செரிமானத்தில் பிரச்சனை உண்டாகும்.
சிறுநீரக செயலிழப்பு:
குடல் பிரச்சனைக்கு அடுத்து இருப்பது சிறுநீரக பாதிப்பு தான். நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது சிறுநீரகங்களில் உள்ள கிருமிகளை வெளியேற்றும் செயல் முறையின் வேகம் குறைந்து விடும். சிறுநீரகம் தனது பணியை முறையாக செய்யாத பட்சத்தில் சிறுநீரக தொற்று என தொடங்கி செயலிழப்பு வரை பல நோய்களை சந்திக்க கூடும்.
மூன்றாவதாக ஆர்த்ரைடிஸ்:
நின்று கொண்டு தண்ணீர் குடித்தால் ஆர்த்ரிடிஸ் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. முன்னதாகவே மூட்டுகளில் நீர்மங்கள் சமநிலையில் இருக்கும். அதனை இவை கலைப்பதாக கூறுகின்றனர்.
நான்காவதாக நரம்பு பிரச்சனை:
நமது உடலில் சிம்பதெட்டிக் நரம்பு வேலை செய்ய ஆரம்பித்தால் இதய துடிப்பு ரத்த நாளங்கள் என அனைத்தும் வீரியமடையும். இந்த பிரச்சனையானது நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் போது தான் உண்டாகும். இதுவே உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும் போது பாரா சிம்பதெட்டிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து உடலை லேசாக வைத்துக் கொள்ள உதவும்.