கோடை காலத்தில் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் உடல் சூட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.உடலில் அதிக சூடு இருந்தால் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.குழந்தைகள் பலர் உடல் சூட்டால் வயிற்று வலி,கண்ணு பொங்குதல்,சிறுநீர் கடுப்பு,சில்லி மூக்கு உடைதல்,தலைமுடி உதிர்தல்,வேனல் கட்டி வருதல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
எனவே கோடை காலத்தில் உடல் சூடாகாமல் இருக்க இங்கு தரப்பட்டுள்ள சிலவகை தீர்வுகளை பின்பற்றி பலனடையலாம்.
தீர்வு 01:
பெருங்காயம்
கட்டி பெருங்காயத்தை வாங்கி வரவும்.அதை பாத்திரத்தில் போட்டு சிறிது சூடு படுத்த வேண்டும்.அதன் பிறகு இந்த பெருங்காயத்தை ஆறவைத்து பொடித்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் பெருங்காயத் தூள் ஒரு தேக்கரண்டி சேர்த்து தண்ணீர் விட்டு குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பெருங்காய பேஸ்டை வயிற்றின் மீது அப்ளை செய்தால் உடல் சூடு தணியும்.
தீர்வு 02:
ஓமம்
25 கிராம் ஓமத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு ஓமத்தை கொட்டி அரை கப் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த ஓம பானத்தை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஓம தண்ணீர் 5 மில்லி அளவு குடித்தால் உடல் சூடு தணியும்.
தீர்வு 03:
பெருஞ்சீரகம்
25 கிராம் பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு பெருஞ்சீரகத்தை கொட்டி அரை கப் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பெருஞ்சீரக பானத்தை ஆறவைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பெருஞ்சீரக தண்ணீர் 5 மில்லி அளவு குடித்தால் உடல் சூடு தணியும்.
தீர்வு 04:
நல்லெண்ணெய்
வயிற்றுப் பகுதியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அப்ளை செய்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.நல்லெண்ணெய்யை தொப்புளில் ஊற்றி மசாஜ் செய்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.