அபூர்வ பூ, இதைக் கண்டால் விட்டு விடாதீங்க! அனைத்து நோய்களுக்கும் அருமருந்து!

0
159
#image_title

ரோட்டு ஓரங்களில் கிடக்கும் இதை பார்த்தால் கண்டிப்பாக விட்டு விடாதீர்கள் அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக இதை செயல்படுகிறது.

நாம் எவ்வளவோ நேரங்களில் ரோட்டு கடையில் விற்கும் தேங்காய் பூவை கடந்து சென்றிருக்கிறோம்

 ஆனால் அதற்கு எவ்வளவு பெரிய பயன்கள் உள்ளது? என்று உங்களுக்கு தெரியுமா? உடம்பில் உள்ள பாதி நோய்களுக்கு மருந்தாக இந்த தேங்காய் பூ இருக்கின்றது.

 

இந்த தேங்காய் பூ ஒரு தேங்காய் நன்கு முற்றிய பிறகு கரு வளர்ச்சி அடையும் நிலைதான் தேங்காய் பூ என்கிறார்கள். இது என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி நாம் பார்க்கலாம்.

 

1. இந்த தேங்காய் பூவில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியாக பயன்படுகின்றது. மழைக்காலங்களில் இதை சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமக்கு காய்ச்சல் சளி வராமல் பாதுகாக்கின்றது.

2. இந்த தேங்காய் பூவில் இன்சுலின் அதிகமாக சுரக்கக்கூடிய அதை அதிகபடுத்தக்கூடிய ஒரு மினரல் உள்ளது. அதனால் தேங்காய் பூவே சாப்பிடும் பொழுது இன்சுலின் அதிகமாக சுரந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.

3. தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் எவ்வளவோ மருத்துவர்களை பார்த்தாலும் எந்த ஒரு பலனும் இல்லாமல் இருப்பார்கள் ஆயுசு முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு உடல் பருமனை அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிடும் பொழுது தைராய்டு உங்களுக்கு விரைவில் குணமாகும் உடல் எடையும் குறையும்.

4. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மையை இந்த தேங்காய் பூ கொண்டுள்ளது.

5. புற்றுநோய் உண்டாக்காமல் இருக்க இந்த தேங்காய் பூவை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

6. உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

7. சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றிலும் தீர்வு அளிக்கிறது.

8. சருமத்தை மிகவும் அழகாக பேணி காக்க உதவுகின்றது.  இளமையுடன் தோற்றமளிக்க தினசரி இதை சாப்பிட்டால் போதும்.

9. ஜீரண மற்றும் வாயு கோளாறுகளை சரி செய்கிறது.

10. உடல் அசதி உடல் சோர்வு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

 

இப்படி ஏகப்பட்ட நல்ல சத்துக்கள் தேங்காய் பூவில் உள்ளன.  அதனால் எங்காவது ரோட்டில் இதை பார்க்கும் பொழுது வாங்கி சாப்பிடுங்கள். இதனுடைய சுவையும் மிகவும் நன்றாக இருக்கும்.

author avatar
Kowsalya