1 கிளாஸ் குடிங்க ஒரே நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்துவிடும்!! அனுபவ உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!

0
34

1 கிளாஸ் குடிங்க ஒரே நிமிடத்தில் ஒற்றை தலைவலி பறந்துவிடும்!! அனுபவ உண்மை உடனே ட்ரை பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் டிஜிட்டல் மயமானது அதிக அளவில் வளர்ந்து விட்டதால் கணினி செல்போன் போன்றவற்றை அதிகமாக உபயோகிக்க வேண்டி சூழல் உண்டாகிவிட்டது.

அந்த வகையில் இதனை அதிக அளவில் உபயோகிப்பதாலும் கண் வறட்சி ஏற்பட்டு தலைவலியும் உண்டாகிறது. அந்த வரிசையில் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு விட்டால் அதனை சமாளிப்பது சற்று கடினம்.

ஏனென்றால் இந்த ஒற்றை தலைவலி ஒரு நபருக்கு ஏற்படுமாயின் அவர்களின் உடல் அமைப்பை பொறுத்து அதற்கு உண்டாகும் வலிகள் மாறுபடும்.

ஒரு சிலருக்கு வாந்தி போன்றவை ஏற்படும். ஒரு சிலருக்கு ஒரு பக்கம் மட்டும் கடுமையான வலி இருந்து கொண்டே இருக்கும்.

அதிக அளவு மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த ஒற்றைத் தலைவலி மற்றும் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை ஆரம்பித்து விடும்.

அவ்வாறு வரும் பொழுது இதற்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் நிரந்தரமான தீர்வை அளிக்காது. இந்த பதிவில் வருவது பின்பற்றுங்கள் நல்ல மாற்றத்தை காண்வீர்கள்

தேவையான பொருட்கள்:

சதாவரி 5 கிராம்

சுக்கு 5 கிராம்

அமுக்கரா 5 கிராம்

திப்பிலி 5 கிராம்

தாமரைப்பூ 5 கிராம்

மிளகு 5 கிராம்

அக்கிரகாரம் 10 கிராம்

சித்தரத்தை. 5 கிராம்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆயுர்வேதம் மருந்து கடையில் கிடைக்கும்.கொடுத்துள்ள அளவில் வாங்கிக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான பொருட்கள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.அதில் தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்க்க வேண்டும். நன்றாக கொதிக்க விட வேண்டும்.பின்பு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

சுவைக்காக சிறிதளவு பனைவெல்லம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம். இதனை காலை மாலை என இருவேளை குடித்து வர ஒற்றைத் தலைவலி முற்றிலும் குணமாகும்.