இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் ஆயுளுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!

0
196
#image_title

இதனை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் ஆயுளுக்கும் கால்சியம் குறைபாடு வராது!!

இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளை மறந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பலவிதமான உணவுகளை வாங்கி சாப்பிட்டுகிறோம்.

இதனால் நம் உடலுக்கு பலவிதமான தீங்குகள் ஏற்படுகிறது. முக்கியமான ஒரு பிரச்சனை என்னவென்றால் முறையான உணவுப் பழக்கம் இல்லாததால் 20 வயதிலேயே கால்சியம் குறைபாடு ஏற்பட்டு விரைவாகவே உடல் சோர்வு அடைகிறது.

அது மட்டுமில்லாமல் உடல் அசதி, உடல் வலி போன்ற பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதை போக்க சரியான தீர்வு முறையை இந்த பதிவில் காண்போம்.

கால்சியம் குறைபாட்டை நீக்க பின்வரும் பொருள்களை வைத்து பொடி செய்து அதை பயன்படுத்த வேண்டும். கால்சியம் குறைபாட்டை நீக்கும் பொடி செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

கால்சியம் குறைபாட்டை நீக்கும் பொடி செய்ய தேவையான பொருள்கள்

கேழ்வரகு – 4 டேபிள் ஸ்பூன்

பாதாம் – 10

பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டேபிள் ஸ்பூன்

கற்கண்டு – 3 முதல் 4 துண்டுகள்

செய்முறை

மேற்கூறிய கேழ்வரகு, பாதம், பெருஞ்சீரகம், கற்கண்டு ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து நைஸ்ஸாக பொடியாக அரைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை

அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அளவுக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு அரைத்து வைத்துள்ள பொடியில் 2 டீஸ்பூன் பொடி எடுத்து மற்றொரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கெட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும். இந்த கலவையை அடுப்பில் கொதிக்கும் பாலில் ஊற்றி ஒரு 5 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு அதை இறக்கி ஆற வைக்க வேண்டும். மிதமாக ஆறிய பின்பு தேவை என்றால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து இதை குடிக்கலாம். ஏற்கனவே கற்கண்டை நாம் மாவில் சேர்த்துள்ளதால் இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் தேன் அல்லது நாட்டு சர்க்கயை கலந்து கொள்ளலாம்.

குடிக்கும் முறை

இதை நாம் காலை உணவுக்கு பதிலாக பயன்படுத்தலாம். அவ்வாறு காலை நேரத்தில் பயன்படுத்தும் போது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும். மற்றும் இரவு தூங்கும் முன்பும் இதை கலந்து குடிக்கலாம். இரவு நேரம் குடிக்கும் பொழுது நமக்கு செரிமான பிரச்சனை ஏற்படாது. இதை தேடர்ந்து ஒரு வாரம் அதாவது 7 நாள் அல்லது 10 நாள் குடித்து வந்தால் உடல் வலி, உடல் சோர்வு, இடுப்பு வலி போன்று எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

பயன்கள்

* கேழ்வரகில் அதிகப்படியான நார்ச்சத்துகளும் கால்சியம் சத்துகளும் உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கின்றது.

* இந்த கலவையை செய்து குடிப்பதால் செரிமான பிரச்சனை, அஜீரனக் கோளாறு, வாயுப் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை தீர்க்கின்றது.

* இதில் இருக்கும் கற்கண்டு, பெருஞ்சீரகம், பாதம் கலவை கண் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கின்றது.

* உடல் சோர்வு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கின்றது