போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

Photo of author

By Vijay

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

Vijay

Updated on:

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில வைத்து கைது செய்தனர்.

மேலும், இயக்குனர் அமீருக்கும் தயாரிப்பாளரான ஜாஃபருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்த அமீர் சமீபத்தில் கூட டெல்லியில் நடந்த விசாரணையில் ஆஜராகி அவர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்தார்.

இது ஒருபுறம் இருக்கு மற்றொருபுறம் சென்னை சாந்தோமில் உள்ள ஜாஃபரின் வீட்டில் மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியால் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல இயக்குனர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே அமீர் போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரானது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.