Home Breaking News ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!

0
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!
#image_title
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்!அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கேரளாவில் நடிகர் திலகர் சல்மான் அவர்கள் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோரது நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. அப்பொழுது ஜிகர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்தது.
அதாவது சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது நடிகர் பாபி சிம்ஹா அவருக்கும் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய திரைப்பட விருது ஜிகர்தண்டா திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கவுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் அறிவித்தார்.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டு, நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிப்பு டீசர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. மேலும் சமீபத்தில் ஜிகர்தண்டா திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி ஸ்பேசலாக நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்துவிட்டது. இந்நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கேரளாவில் வெளியிடும் நிறுவனம் பற்றி படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 10ம் தேதி வேபரர் ப்லிம்ஸ் நிறுவனம் சார்பாக நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் கேரளாவில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.