இந்த 2 பொருளை மட்டும் சாப்பிடுங்கள்!! இனி சாகும் வரை ஒரு முடி கூட கொட்டாது!!

0
95
#image_title

இந்த 2 பொருளை மட்டும் சாப்பிடுங்கள்!! இனி சாகும் வரை ஒரு முடி கூட கொட்டாது!!

நமக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை தலைமுடி உதிரும் பிரச்சனை ஆகும். இந்த தலைமுடி உதிரும் பிரச்சனையை சரிசெய்ய பலவித எண்ணெய்கள், மருந்துகள், மாத்திரைகள், சூரணங்கள் எடுத்தும் தற்காலிக பயன் கொடுத்திருக்கும். மீண்டும் முடி உதிர தொடங்கியிருக்கும். இந்த முடி உதிர்தலை நிரந்தரமாக நிறுத்த வெறும் இரண்டு பொருட்களை வைத்து மருந்தை தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…

 

* மோர்

* கறிவேப்பிலை

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

முடி உதிர்வை குணப்படுத்தும் கறிவேப்பிலை மோர் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம். முதலில் ஒரு டம்ளர் மோர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து இந்த மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

 

இதனால் தலைமுடி கொட்டும் பிரச்சனை குணமடையும். மேலும் முடி நன்றாக கருமையாக வளரும். வெள்ளை முடி கருமையாக மாறிவிடும். முடி அடர்த்தியாக மாறும். பெண்களுக்கு கூந்தல் நீளமாக வளரும்.

 

கறிவேப்பிலையின் பயன்கள்…

 

* கறிவேப்பிலையை காயவைத்து பொடி செய்தோ அல்லது கறிவேப்பிலை பொடியை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குணமாகும்.

 

* சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், உப்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் ஹீமோகுளோபின் அளவு குறைந்து கொண்டே செல்லும். அதற்கு அவர்கள் மாத்திரை சாப்பிடுவார்கள். உப்புச் சத்து உள்ளவர்களுக்கு இந்த ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இதனால் அவர்கள் கடைசியில் டயாலிசிஸ் சிகிச்சை எடுப்பார்கள். அவ்வாறு சிகிச்சை எடுப்பவர்களுக்கும், சர்க்கரை நோய், உப்புச்சத்து குறைபாடு உள்ளவர்களும் இந்த கறிவேப்பிலையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்ட வேண்டும். இதனால் உப்புச்சத்து குறைபாட்டை இது குணமாக்கும். சர்க்கரை நோயையும் கட்டுப்மடுத்தும்.

 

* கறிவேப்பிலையை கர்ப்பிணிப் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் இதை எடுத்துக் கொள்ளும் பொழுது சத்துக் குறைபாட்டை சரிசெய்யும்.

 

* எண்ணெயில் இருக்கும் நஞ்சுகளை நீக்கக் கூடிய சத்துக்கள் கறிவேப்பிலையில் உள்ளது. இதனால் எண்ணெயின் மூலம் உடலுக்கு செல்லும் கெட்ட சத்துக்கள் அனைத்தும் தடுக்கப்பட்டு உடலை நன்றாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.