உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

0
49
#image_title

உங்கள் சருமத்தின் நிறம் மாற இந்த 5 பழங்களை சாப்பிடுங்கள்!!

நம்மில் பலருக்கு முகம் பொலிவாகவும்,அழகாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பின்விளைவுகளை சந்திப்பதை விட இயற்கையாக விளையும் பழங்களை உண்டு சரும அழகை மேம்படுத்தி கொள்ளலாம்.இதனால் நம் உடலும் ஆரோக்யமாக இருக்கும்.நமது சருமமும் அழகாகவும்,பொலிவாகவும் இருக்கும்.

சருமம் அழகாகவும்,பொலிவுடனும் இருக்க உண்ண வேண்டிய பழங்கள்:-

1.ஆப்பிள்

2.வாழை

3.மாதுளை

4.ஆரஞ்சு

5.பப்பாளி

இந்த பழங்களை தினசரி உண்டு வந்தோம் என்றால் உடலில் பல அற்புத நன்மைகள் நிகழும்.ரசாயன பொருட்களை உபயோகித்து சருமத்தின் நிறத்தை மாற்ற முயற்சிப்பதை விட இயற்கையாக விளைந்த நம் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய இந்த ஐந்து பழங்களை உண்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.மிகவும் பொலிவோடு அழகாக இருக்கும்.

1.ஆப்பிள்

நம் சருமத்தின் நிறத்தை சிறந்த முறையில் முன்னேற்றுவதில் இந்த ஆப்பிள் பழம் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.தினமும் ஆப்பிள் பழத்தை உண்டு வந்தோம் என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாக இருக்கும்.இந்த பழத்தில் வைட்டமின்கள் ஏ,சி மற்றும் ஈ சத்துக்கள் அடங்கி இருப்பதால் இதனை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம் இழந்த இளமைப் பொலிவை மீட்டு விட முடியும்.இந்த ஆப்பிள் பழத்தின் தோல் மற்றும் பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,பொட்டாசியம்,மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது உங்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

2.வாழை

இந்த பழத்தில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை இருப்பதால் இவை நம் சருமத்தை நீரேற்றமாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.ஈரப்பதம் அதிகம் காணப்படும் இந்த வாழைப்பழங்கள் உடலில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதன் மூலம் சரும அமைப்பை மேம்படுத்தமுடியும்.இந்த வாழைப்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தோம் என்றால் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை உண்ணும் தேவையை குறைக்க முடியும்.இந்த பழத்தை மசித்து, முகத்தில் பூசுவதன் மூலம் சரும ஆரோக்கியம் பாதுகாப்பதுடன்,முகம் பொலிவாக மாறும்.முகம் மிளிர வேண்டுமென்றால் நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் 2 அல்லது 3ன் துளிகள் தேன் சேர்த்து முகத்தில் வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

3.மாதுளை

தினசரி உணவில் மாதுளையை சேர்த்து வந்தோம் என்றால் சருமம் மிருதுவாகவும்,பொலிவாகவும் இருக்கும்.மாதுளையில்அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மாதுளையின் தோலை நீக்கி அதில் உள்ள விதைகளை மசித்து முகத்தில் தடவுவதால் முகத்தில் படிந்துள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்த முடியும்.இந்த பழத்தின் சாறு ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலின் நிறத்தை மாற்ற உதவுகிறது.

4.ஆரஞ்சு

தினமும் ஆரஞ்சு பழத்தை உண்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.இதில் அதிகளவு வைட்டமின் சி அடங்கி இருப்பதால் இவை நம் சருமத்திற்கான சிறந்த பழங்களில் ஒன்றாக விளங்குகிறது.இது இயற்கையாகவே சிட்ரஸ் எண்ணெய்களைக் கொண்டுள்ளது, இது சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாகவும்,வெளியில் மிருதுவாகவும் வைத்திருக்கும்.இது பளபளப்பான சருமத்தை பெற சிறந்த பழமாகும்.இதை சாப்பிடுவது இயற்கையான கொலாஜனை உருவாக்க உதவுகிறது.இது இழந்த இளமை பருவத்தை மீட்டெடுக்க உதவுகிறது.இதில் அடிக்கடி பழச்சாறு செய்து குடித்து வருவது உடலுக்கு மிகவும் நல்லது.

5.பப்பாளி

நமது சருமத்துக்கு மிகவும் பயனுள்ள பழம் பப்பாளி.இந்த பழத்தை பேஸ்பேக்காக பயன்படுத்தும் பழக்கம் நம்மில் பலரிடம் உண்டு.இந்த பழம் நம் முகத்தைப் பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.சருமத்தின் கலரை மேம்படுத்துவதோடு முகச் சுருக்கங்களைப் போக்கி இளமையாக வைத்திருப்பதில் இந்த பழம் முக்கிய பங்காற்றுகிறது.அடிக்கடி முகத்திற்கு பப்பாளியை பேஸ்பேக்காக பயன்படுத்தும் போது முகம் நிறம் மாறுவதோடு இளமையாகவும்,மென்மையாகவும் சருமம் இருப்பதை போல் உணர முடியும்.