கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. அரசு வேலை! ஜனவரி 05 வரை விண்ணப்பம் செய்யலாம்!

Photo of author

By Divya

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. அரசு வேலை! ஜனவரி 05 வரை விண்ணப்பம் செய்யலாம்!

Divya

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு.. அரசு வேலை! ஜனவரி 05 வரை விண்ணப்பம் செய்யலாம்!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அலுவலக உதவியாளர் பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 05 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர்

பணியிடம்: சென்னை

பதவி: அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கான அதிகப்பட்ச வயது 32 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700/- முதல் 58,100/- வரை சம்பளம் வழங்கப்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: ஜனவரி 05 ஆம் தேதி

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

விண்ணப்பம் செய்ய வேண்டிய முகவரி:

இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை,
நெ.5, காமராஜர் சாலை, சென்னை 600 005.