ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

0
157
Elderly man committed suicide in Erode district! The reason why the police investigation!
Elderly man committed suicide in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை யடுத்துள்ள  திங்களூர் பாப்பம்பாளையம் கரட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (78). இவரதின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் மாகாளியின்  மகன் பழனிசாமி. மாகாளி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும்  மாகாளி சற்று மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் இந்நிலையில்  நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள  மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அப்பகுதி மக்கள்  இந்த சம்பவம் குறித்து திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும்   அந்த தகவலின் பேரில்  திங்களூர் போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு வந்து மாகாளியின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து திங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleபாஜக சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்! 
Next articleவிஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!