தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

0
184

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வா? பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக பேசியுள்ள மின்வரி மற்றும் கலால்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ‘200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும்’ தெரிவித்துள்ளார்.

100 யூனிட் வரை பயன்படுத்தப்படுபவர்களுக்கு எந்த கட்டண உயர்வும் இருக்காது என தெரிகிறது. இந்த மின்கட்டண உயர்வு விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது. இதுகுறித்து மேலும் பேசியுள்ள செந்தில் பாலாஜி “மின்கட்டணத்தை உயர்த்தாமல் மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன்பெற முடியாத சூழல் உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக” கூறியுள்ளார்.  இந்த விலை உயர்வு கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த போது மின்கட்டண உயர்வை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleபள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!
Next articleபரபரப்பு! தற்கொலை செய்து கொண்ட கள்ளக்குறிச்சி மாணவியின் கடிதம் வெளியானது!