எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

0
194
Emane personally came and took Sambham! The people of the area in fear!
Emane personally came and took Sambham! The people of the area in fear!

எமனே நேரில் வந்து அழைத்து சென்ற சம்பவம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள பட்டிபாடி பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரதின் மனைவி தேவி(37). கணவன் மனைவி இருவரும் நேற்று ஏற்காடு பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஸ்கூட்டரை தேவி இயக்கி கொண்டிருந்தார்.பின்புறம் அவரது கணவர் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் பட்டிபாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஏற்காடு நடூர் அருகே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது சாலையின் குறுக்கே வந்த காட்டெருமை திடீரென தேவி மீது மோதியது.அதில் தேவி பலத்த காயம் அடைந்தார் .

மேலும் அவரதின் கணவர் எந்தவித காயமும் இல்லாமல் தப்பித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் படுகாயம் அடைந்த தேவியை ஏற்காட்டில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பிறகு அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தேவி  உயிரிழந்தார். திடிரென காட்டெருமை முட்டி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அப்பகுதி மக்கள்  வன விலங்குகள் சாலையில் நடமாடுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K