Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

0
152

Tncsc யில் வேலைவாய்ப்பு! அதற்கான முழு விவரங்கள் இதோ!

தமிழ்நாடு நுகர்வோர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது பருவகால பட்டியல் எழுத்தர், பருவகாலங்களில் உதவுவர் மற்றும் பருவகால காவலர் பணிகளில் 206 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான விண்ணப்பங்கள் பணிகளுக்கு இந்த  சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்கள் இந்த நிறுவனமானது தமிழ்நாடு நுகர்வோர்  வாணிபக் கழகம். பணியிடமானது நாகப்பட்டினம். பருவகால பட்டியல் எழுத்தர் பணியில் 100 காலியிடமும் , பருவகால உதவுவர் 74 காலியிடமும் மேலும் கலர் காவலர் பணியில் 32 காலி இடமும் உள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க  4.7.2022 ஆம் கடைசி தேதி ஆகும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு மட்டும் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பருவகால காவலர் மற்றும் உதவுவதற்கு கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது.

இந்த பணிகளைப் பற்றி மேலும் தகவல்களை அறிய tncsc.tn.gov.in அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது

 

author avatar
Parthipan K