முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!

0
78

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் தன்னுடைய பேச்சால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக எந்தவிதமான கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இவர் திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கின்றார் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் எனவும், அதற்காக தான் இவர் டெல்லி சென்று இருக்கிறார் என்றும், அரசியல் களத்தில் பரபரப்பாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இதற்கு காரணம் சென்ற கால அரசியலில் அவருடைய பாரதிய ஜனதாவின் ஆதரவு பேச்சு தான் என்று சொல்லப்படுகிறது..
இந்த சூழலில் இன்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இடம் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அதற்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்துப் பேசினார்.

அவர் தெரிவித்ததாவது ராஜேந்திர பாலாஜி தொடர்பாக திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது அவர் அதிமுகவில் தான் இருக்கின்றார். பாஜகவில் இணைய மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது வாங்கப்பட்ட கடன் தொகை வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் இதுவரையில் செயல்படுத்தவும் இல்லை, நிறைவேற்றவில்லை, சட்டமன்றத்தை 100 நாட்கள் கழித்துதான் கூடியிருக்கிறார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யும் சமயத்தில் செலவு கணக்கை தாக்கல் செய்வது இயல்பான நடைமுறை தான் என்று தெரிவித்திருக்கிறார். அவர் அதிமுக ஆட்சி காலத்தில் நிர்வாக சீர்கேடு நடந்திருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்திருக்கிறார்.