ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

Photo of author

By Vijay

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம்: திமுக கணக்குகளுக்கு பழனிசாமி தந்த பதிலடி!

Vijay

Updated on:

சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க. கூட்டல்-கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் மகிழ்ச்சி தான்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “எங்கள் கணக்குகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். எங்கள் மீது நீங்கள் கரிசனம் காட்டத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

நிருபர்களை சந்தித்தபோது, அவர் தி.மு.க. அரசின் நிதி மேலாண்மையை கடுமையாக விமர்சித்தார். “நான்கு ஆண்டுகளில் உங்கள் அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறது. ஆனால் இதுகுறித்து எந்த வெள்ளை அறிக்கையும் வெளியிடவில்லை. நிதி மேலாண்மை குழுவின் அறிக்கை என்ன? பட்ஜெட்டில் வழங்கிய தகவல்கள் மக்களை ஏமாற்றுவதற்கான வார்த்தை விளையாட்டுகள் மட்டுமே” என குற்றம் சாட்டினார்.

அத்துடன், “மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் மீது புதிய வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், அரசு மக்களின் நிலைமையை புரிந்து கொள்ளவில்லை” என்றும் கூறினார். தி.மு.க. கூட்டணி மற்றும் அதன் ஆட்சியின் நியாயமற்ற செயல் முறைகளை வெளிக்கொணர்ந்த அவர், “மேல்மாடியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது, கீழே காங்கிரசுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இது தான் தி.மு.க.வின் உண்மை நிலை” எனக் கண்டித்தார்.

இதேபோல், “அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. எங்களுக்குத் தேவையான கூட்டணியை தேர்ந்தெடுப்போம். ஆனால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் ஆதரிக்கமாட்டோம். 2026ல் தி.மு.க. அரசு மக்கள் துணையுடன் அகற்றப்படும்” என்றார். இதன் மூலம், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையேயான அரசியல் போட்டி மேலும் தீவிரமாகி உள்ளது.