கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

0
49

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் அடுத்தகட்ட தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து 33,330 குடும்பங்களைச் சேர்ந்த 1,66,806 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சிறிது சிறிதாக விடுவிக்கப்பட்டனர்

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் மாறியுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இறுதியாக பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 பேரில் 69 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 65 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது எஞ்சிய 4 பேரும் குணமடைந்தனர். இதுவரை ஈரோட்டில் கொரோனாவால் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார்.

இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது 7-வது இடத்தில் உள்ளது. தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் 2058 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Ammasi Manickam