விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
34
Everyone can apply for subsidy to buy happy news machines for farmers!! Important announcement made by the minister!!
Everyone can apply for subsidy to buy happy news machines for farmers!! Important announcement made by the minister!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் இயந்திரங்கள் வாங்க மானியம் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!! அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

மத்திய அரசும்,  மாநில அரசுகள்  விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி சிசான் சாம்மன் நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் வியசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு அறிவித்து வருகிறது.

அதனையடுத்து தமிழ்நாடு அரசு  விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசன அமைக்க மானியம் வழங்கி வருகிறது.  இந்த நிலையில் இந்திய வங்கி  விவசாயி வாடிக்கையாளர்களை மேம்பபடுத்தும்  வகையில் டிராக்டர் வாங்க கடன் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் பவர் டில்லர் மற்றும் களை எடுக்கும் கருவிகள் வகுவதற்கு வகியம் வழங்க உள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 5000 வேளாண் இயந்திரங்களை வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும்இவர் குறிப்பில் சிறு, குறு, அதிதிராவிடார் மற்றும் பழங்க்ளுடியினர், பெண்களுக்கு 50 % சதவீதம் மானியம் வழங்க உள்ளதாகவும், மற்ற விவசாயிகளுக்கு  40 % சதவீதம் மணியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த மானிய தொகையை பெறுவதற்கு உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மானிய தொகையை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

author avatar
Jeevitha