முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

0
64

முகம் தங்கம் போல் ஜொலிக்க!! நீங்கள் செய்ய வேண்டியவை!!

பெண்கள் முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்கு பியூட்டி பார்லர் போவதை வழக்கமாக வைத்து கொள்வார்கள். பியூட்டி பார்லர் சென்று முகத்தை அழகுப்படுத்தி கொள்வதில் பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்.

பார்லரில் கெமிக்கல் கலந்த பொருள்களை பயன்படுத்தி சருமத்தில் அப்ளை செய்வதினால் சரும அழகானது நாளடைவில் சுருக்கம், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பதற்கு 100% வாய்ப்புள்ளது.

எனவே வீட்டிலுள்ள இயற்கை பொருளே நமது முகத்திற்கு பேரழகை கொடுக்கும். முகம் ஜொலிக்க வீட்டில் செய்யக்கூடிய இயற்கையான ரெமிடியை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்

எலுமிச்சை பழம்

புதினா தலை

செய்முறை:

1: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

2: பின்பு அந்த தண்ணீரில் நறுக்கி வைத்த வெள்ளரிக்காயை சேர்க்கவும்.

3: எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து அதில் பாதி எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும்.

4: இந்த அதே சிறிதளவு புதினா தலையை சேர்க்கவும்.

5: அனைத்தையும் சேர்த்தவுடன் நன்றாக கலக்கி விட்டு இரவு முழுக்க ஊற வைத்துக் கொள்ளவும்.

அந்த தண்ணீரை தினமும் காலையில் குடித்து வந்தால் போதும் நம் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள நச்சுத்தன்மைகள் அனைத்தும் நீங்கிவிடும் முகத்திற்கு நல்ல பொலிவை தரும்.

95% உள்ள வெள்ளரிக்காயை தினமும் நாம் சேர்த்து வந்தால் உடம்பு குளிர்ச்சியாக இருக்கும்.காலையில் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பை நீக்கும் மற்றும் உடல் எடை குறைவாக இருக்கும்.

இந்த பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் கரும்புள்ளி ,முகப்பரு ஆகிய பிரச்சனைகள் தீர்ந்துவிடும் மற்றும் இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் C இது போன்ற இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

author avatar
Parthipan K