நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்!

0
105
Famous actresses who got drunk at midnight! Model beauties! Big Boss Celebrity!
Famous actresses who got drunk at midnight! Model beauties! Big Boss Celebrity!

நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்!

பெரும் புள்ளிகள் எப்போதும் அவர்களுக்கென ஒரு தனி வட்டாரத்தை உருவாக்கி அதன் மூலம் பல வகையில் ஆதாயம் தேடுபவர்களாகவே இருக்கின்றனர். தற்போது போலீசாரிடம் பிடிபட்ட அனைவரும் திரைத்துறை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு பார்ட்டி என்ற பெயரில், போதை பொருட்கள் என சகலமும் ஏற்பாடு செய்து தரப்பட்டு உள்ளது.

தற்போது மராட்டியத்தில் சுற்றுலா பகுதியாக கூறப்படும் நாசிக் மாவட்டத்தில் இகத்புரிஎன்ற ஒரு இடத்தில் உள்ள பெரிய பங்களா வீட்டில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில், நள்ளிரவில் போலீசார் அந்த பங்களா வீட்டுக்கு சென்றனர். அப்போது, அந்த பங்களாவுக்கு வெளியே விலை உயர்ந்த சொகுசு கார்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் பங்களாவின் உள்ளே அதிக சத்தத்துடன் பாடல்கள் இசைத்துக் கொண்டும் இருந்தனர். இதனையடுத்து விருந்து நடப்பதை உறுதி செய்த போலீசார் பங்களாவுக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு ஆண்களும், பெண்களும் போதை மயக்கத்தில் அரைகுறை ஆடைகளுடன் கும்மாளம் அடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது சோதனை செய்ய வந்த போலீசாரை பார்த்து விருந்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் அங்கு இருந்த அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இது குறித்து நாசிக் ஊரக போலீஸ் சூப்பிரண்டு சச்சின் பாட்டீல்  செய்தியாளர்களிடம் கூறும் போது இவ்வாறு கூறினார்.

போதை விருந்துகள் ஸ்கை தாஸ், ஸ்கை லாகூன் என அடுத்தடுத்து இருந்த 2 பங்களாக்களில் நடந்து கொண்டு இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த சோதனையின் மூலம் நாங்கள் 12 பெண்கள் மற்றும் 10 ஆண்களை கைது செய்து உள்ளோம். அவர்கள் அனைவரும் போதைப்பொருள், குட்கா முதலியவற்றை பயன்படுத்தி இருந்தனர். இதில் பிடிபட்ட பெண்களில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளரும் ஆவார். இதனை தொடர்ந்து அவர்களின் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விருந்துக்கு ஏற்பாடு செய்தவரை தொடர்ந்து தேடிவருகிறோம். பங்களாவில் இருந்து கேமரா போன்ற பொருட்களையும் கைப்பற்றி உள்ளோம்.  இந்த வழக்கு தொடர்பாக நைஜீரிய பெண் ஒருவரும் மும்பையில் பிடிபட்டுள்ளார். எனவே சிறப்பு பிரிவினர் இந்த வழக்கை பற்றி மேலும் தகவல்களை தேட மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர் என கூறினார்.

போலீசார் விருந்து நடந்த பங்களா வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட கொகைன் உள்ளிட்ட பல போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் போதை விருந்தில் சிக்கிய பெண்களில் 4 பேர் இந்தி மற்றும் தென்னிந்திய நடிகைகள் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் சிலர் வெப் சீரியல்களில் நடிக்கும் மாடல் அழகிகளும் இருந்து உள்ளனர். இதேபோல பிக்பாஸ் போட்டியாளராக இருந்த ஒரு  பெண் நடிகையும் இருந்துள்ளார். இவர் நடன இயக்குனராக இருந்துள்ளார் என்பதும்  குறிப்பிடப்படுகிறது.

இதுதவிர ஈரான் நாட்டை சேர்ந்த பெண் நடன இயக்குனர் ஒருவரும் இந்த போதை விருந்தின் மூலம் போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதேபோல கிரிக்கெட் சூதாட்ட தரகர் ஒருவர் தனது பிறந்தநாளையொட்டி இந்த போதை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளன. இந்த விருந்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட ஆண்கள் அனைவரும் பணக்கார தொழில் அதிபர்கள் என்பதும், பெண்கள் திரைத்துறை, மாடலிங் துறையை சேர்ந்தவர்கள் எனவும்  தெரியவந்துள்ளதால், விருந்து நிகழ்ச்சியில் விபசாரம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் மாடல் அழகிகள், நடிகைகள் சிக்கிய சம்பவத்தை கேள்விப்பட்டு நாசிக்கில், பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.