காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!

0
84
Husband who killed his love wife and played Corona! Police investigation reveals!
Husband who killed his love wife and played Corona! Police investigation reveals!

காதல் மனைவியை கொன்று கொரோனா நாடகமாடிய கணவன்! போலீசார் விசாரணையில் அம்பலம்!

காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை கொன்று விட்டு பொய்யாக கொரோனா மீது பழி போட்டு  நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த மனதை பதற வைக்கும் சம்பவம் ஆந்திராவில் நடந்தேறியுள்ளது.

திருப்பதியில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல்  கிடப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த இடத்திற்கு உடனே விரைந்த  போலீசார் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைப்பற்றப்பட்ட தலைமுடியைக் கொண்டு அதனை பெண் என உறுதிப்படுத்துவதாக கூறிய  போலீசார் அந்தப் பகுதியில் மாயமான பெண்களின் விவரங்களை கேட்டு சேகரித்தனர்.

அதன் அடிப்படையில், திருப்பதியில் புங்கனூர் மண்டலத்தில் உள்ள ராமசமுத்திரத்தைச் சேர்ந்த அலிபிரி சாலையில், ஒரு  அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த டெக்கி  புவனேஸ்வரி என்ற பெண் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாயமானது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்த  போது  புவனேஸ்வரியை அவரது கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி அவரது வீட்டிலேயே  கொலை செய்து உடலை மட்டும் மருத்துவமனையின் வளாகத்தில் எரித்தது தெரியவந்தது.

அவரது மனைவி புவனேஸ்வரியை தன் சொந்த வீட்டில் வைத்து கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்து வந்து அங்கு தீவைத்து எரித்தது தெரியவந்திருப்பதாக போலீசார் தரப்பில் இருந்து  கூறியுள்ளனர்.

ஆனால், தனது உறவினர்களிடம் ஸ்ரீகாந்த் ரெட்டி தனது மனைவி கொரோனா டெல்டா  வைரசினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார் என்றும் கூறி உள்ளார்.  அதனை தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததால் மனைவியின்  உடலை  கொடுக்கவில்லை எனக் கூறியும் பொய்யாக நாடகமாடி உள்ளார். தற்போது போலீசாரின் தீவிர விசாரணையின்  காரணமாக ஸ்ரீகாந்த் ரெட்டி நடத்திய நாடகம் ஊர் உலகத்திற்கு அம்பலமானது.

மேலும் அவர் என்ன காரணத்திற்காக தன் மனைவியை கொன்றார் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.