சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அடுத்த போட்டி டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!!

0
171
#image_title

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதியன்று நடைபெறும் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 17வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் விற்பனை செய்யப்படும் என ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனையொட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதலே ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்க குவிந்து வருகின்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை ஆன்லைன் மற்றும் கவுண்டரில் தொடங்க உள்ள நிலையில் கவுண்டரில் விற்பனை செய்யப்படும் டிக்கெட்டை வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ரசிகரகள் காத்திருந்து வருகின்றனர்.

குறிப்பாக, I,J,k ஸ்டாண்ட்களில் கீழே மற்றும் மேலே அமர்வதற்கான 2,000 மற்றும் 2,500 ரூபாய்க்கான டிக்கெட்களை வாங்கவும் அதேப்போல் l,D,E ஸ்டாண்ட்களில் லோவர் பகுதியில் அமர்வதற்கான 1,500 ரூபாய் டிக்கெட் கவுண்டரில் நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும், இரவு முழுவதும் வரிசையில் காத்திருப்பதால் ஒரு சில ரசிகர்கள் உணவு உண்டு காத்திருந்தும், ஒரு சிலர் சாலை மற்றும் வரிசையில் உறங்கியபடியும் காத்திருந்து வருகின்றனர்.

author avatar
Savitha