மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

0
48

 

மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து மரணம்… மருமகள் செய்த விபரீத சம்பவம்…

 

திருவள்ளூர் மாவட்டத்தில் மாமனார் மற்றும் மாமியார் அடுத்தடுத்து உயிரிழந்ததால் மருமகள் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே பேட்டை ஊராட்சியில் உள்ள விளக்கனாம்பூடி புதூர் கிராமத்தில் 65 வயதான செல்வம் மற்றும் இவரது மனைவி மணிமேகலை இருவரும் வசித்து வருகின்றனர்.

 

நான்கு மாதங்களுக்கு முன்னர் மணிமேகலை அவர்களின் மாமனார் அதாவது செல்வம் அவர்களுடைய தந்தை அண்ணாமலை என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

 

அதன் பிறகு கடந்த ஜூன் மாதம் மணிமேகலையின் மாமியார் அதாவது செல்வம் அவர்களுடைய தாய் தேவையானை அவர்களும் உயிரிழந்தார். இதனால் மருமகள் மணிமேகலை பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

 

இதையடுத்து மன உளைச்சலில் இருந்த மருமகள் மணிமேகலை அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

 

இதையறிந்த உறவினர்கள் உடல் கருகிய நிலையில் இருந்த மணிமேகலை அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மணிமேகலையை அழைத்து சென்றனர்.

 

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிஐஅ மணிமேகலை அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் இன்றி மணிமேகலை அவர்கள் உயிரிழந்தார். இது குறித்து மணிமேகலை அவர்களின் மகன் முத்துக்குமார் ஆர்.கே பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசராணை நடத்தி வருகின்றனர்.