மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!

0
113
Father who poisoned his daughter!! Tragedy in a family dispute!!
Father who poisoned his daughter!! Tragedy in a family dispute!!

மகளுக்கு விஷம் வைத்த தந்தை!! குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்!!

மகாராஷ்டிராவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி அவரது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை மனைவிடம் கேட்டு அடிக்கடி சண்டை பிடித்து வந்துள்ளார். தினமும் சந்தேகப்பட்டு தகராறு செய்வதால், அவருடைய மனைவி இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

அந்த வாலிபர், மனைவியை சமாதானப் படுத்த, மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். வாலிபர் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் அவருடைய மனைவி இவருடன் வர மறுத்து விட்டார். இதனால் அந்த வாலிபர் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். அதற்கு முன்பாக தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொல்ல  முடிவு செய்து,  சாப்பாட்டில் விஷம் கலந்து, தனது 6 வயது மூத்த பெண் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டியுள்ளார்.

அதை சாப்பிட்ட அந்த குழந்தை வாந்தி எடுத்துள்ளது. பிறகு இளைய மகளுக்கும் அந்த சாப்பாட்டை ஊட்ட முற்பட்டிருக்கிறார். ஆனால் அவருடைய உறவினர்கள், சந்தேபட்டு  குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட விடவில்லை. அதனால் அந்த விஷம் கலந்த சாப்பாட்டை அந்த வாலிபர் சாப்பிட்டுள்ளார்.

பிறகு அந்த வாலிபரும், அவரது மூத்த பெண் குழந்தையும் மயங்கி விழுந்தனர். அவருடைய உறவினர்கள், அவர்கள் இருவரையும் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை இறந்தது. வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
CineDesk