தானியக் கிடங்கில் குபீரென பற்றிய தீ : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

0
246

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்கு எதிரில் உள்ள மத்திய அரசின் தானிய கிடங்கில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் தீப்பற்றியது.

தானியக் கிடங்கில் குபீரென பற்றிய தீ : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினரும் காவல் துறையினரும் விரைந்தனர். 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீவிர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தகுந்த நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேத மதிப்பீடு எவ்வளவு என்று கணக்கிட்டு வருகின்றனர்.

தீயணைப்பு துறையின் விரைந்த நடவடிக்கையை உள்ளூர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Previous articleபொறியியல் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு கொடுங்கள் : மின்வாரியத்துக்கு டாக்டர் ராமதாஸ் கெடு!
Next articleகொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here