கொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!!

0
298

கொரோனா வைரஸால் 2-வது இந்தியர் பலி! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு..! பள்ளிகளுக்கு விடுமுறை!!

கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வரும் சூழலில், இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் ஆர்.எம்.எல் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் மூலம் கொரோனா வைரஸ் மூதாட்டிக்கு பரவியிருந்த நிலையில் திடீரென நேற்று இரவு உயிரிழந்தார். இது இந்தியாவில் இரண்டாவது உயிரிழப்பாகும்.

இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் கரோனா பாதிப்பு அறிகுறி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தந்த மாநிலங்களில் இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், திருமணங்கள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மற்றும் மக்கள் அதிகமாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று மும்பை பகுதிகளிலும் உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் மற்றும் பல்வேறு இடங்கள் கரோனா பாதிப்பினால் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், கோவா, கர்நாடகா, டெல்லி, கேரளா உத்தரகாண்ட், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் பள்ளிக் கூடங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முகமூடி, கையை சுத்தப்படுத்தும் திரவ பொருட்களை அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் மத்திய அரசு கரோனா பாதிப்பின் காரணமாக இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதானியக் கிடங்கில் குபீரென பற்றிய தீ : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
Next articleநள்ளிரவில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார்! தப்பி ஓடிய ஓட்டுனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here