துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

0
64

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

 

உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு ஆண் குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக அங்கிருந்த ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை செய்து வந்துள்ளனர்.இந்த விசாரணையில் காணாமல் போன ரமேஷ் குமாரின் குழந்தை தான் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது போலீசாருக்கு பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ரமேஷ் குமாரின் சகோதரனின் மனைவிக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்து அப்போதே உயிரிழந்து இருக்கின்றன. இதனையடுத்து சகோதரனின் மனைவி சரோஜாதேவி கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என நினைத்து இந்த தம்பதியினர் சாமியார் ஒருவரை சந்திக்க சென்றுள்ளனர். அந்த சாமியார் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்றால் ஒரு ஆண் குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் அவர்கள் தனது தம்பி மகன் குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. யாரோ ஒரு சாமியார் கூறியதை கேட்டு தம்பியின் குழந்தையை கொடூரமாக நரபலி கொடுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

author avatar
Parthipan K