என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! 

Photo of author

By Rupa

என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு! 

Rupa

Find my missing son! Public praise for the quick action of the police!
என் மகனை காணவில்லை கண்டுபிடித்து கொடுங்கள்! போலீசாரின் துரித செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மாணவர் விடுதியில் தங்கியிருந்த ஆதித்யன் ஒரு வாரத்திற்கு முன்பு, அரசு விடுதியில் இருந்து காணவில்லை என தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பெயரில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் வழக்கு பதிவு செய்து மாணவன் ஆதித்யனை சார்பு ஆய்வாளர் வேல் மணிகண்டன் தீவிரமாக தேடிவந்தார்.
இந்நிலையில் அந்த மாணவனை பத்திரமாக மீட்டு தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, மாணவன் ஆதித்யன் பெற்றோர்களை அழைத்து இன்று காவல் ஆய்வாளர் சங்கரன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேலுமணிகண்டன் சக காவலர்கள் முன்னிலையில் பெற்றோர்களிடம் மாணவரை  ஒப்படைத்தனர். இச்சம்பவம் பெற்றோர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.மாணவனின் பெற்றோர்கள் காவல்துறைக்கு பெரும் பாராட்டை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தேவதான பட்டி பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்ற காவல் ஆய்வாளர் சங்கர் என பெயர் போற்றப்பட்டது.