வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

0
160
#image_title

வீட்டில் பண வரவு அதிகரிக்கும் ஐந்து பொருட்கள் கொண்ட பரிகாரம்!! இப்படி செய்தால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்!!

இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும்.கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள்.சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும்.அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்.இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும்.

சிலர் சுதாரித்து கொண்டு சிறுக சிறுக பணத்தை சேர்க்கின்றனர்.இருந்தபோதும் ஏதேனும் ஒரு வழியில் செலவு வந்து விடுகிறது.சம்பாதிப்பது 10 ரூபாய் என்றால் செலவு 100 ரூபாயாக இருக்கிறது.

இதனால் சேமிக்கவும் முடியமால் செலவுகளையும் கட்டுப்படுத்த முடியமால் பலரும் திணறி வருகின்றனர்.சிலருக்கு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருத்தும்.வேறு சிலருக்கு சேமித்த பணத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்று வருத்தம்.

நம் சம்பள பணம் கையில் வருவதற்கு முன் 1000 செல்வுகள் ரெடியாக காத்து கொண்டிருக்கும் பொழுது எங்கிருந்து சேமிக்கிறது.அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது என்று வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழிமுறைகளை கடைபிடித்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி பண மழை கொட்ட தொடங்கும்.

முதலில் வீட்டில் மகா லட்சுமி தாயார் குடி இருக்க வேண்டும்.அவர் மனம் குளிரும் படி செய்ய வேண்டும்.மகா லட்சுமி தாயார் இயற்கையாக வாசனை நிறைந்த பொருட்களில் தான் குடியிருப்பார்.அதனால் பணம் வைக்கும் இடத்தில் அதிக வாசனை நிறைந்த ஏலக்காய்,பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வைக்க வேண்டும்.

அதன்படி வீட்டில் பண வரவு அதிகரிக்க சில பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.அந்த பொருட்கள் என்னெவென்றால் 1 குப்பைமேனி வேர்,1/2 தேக்கரண்டி சோம்பு,3
ஏலக்காய்,1 பச்சை கற்பூரம் மற்றும் இவற்றை கட்டி வைக்க மஞ்சள் துணி.

முதலில் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.அங்கு ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து மஞ்சள் பூசிக் கொள்ளவும்.பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள சோம்பு,ஏலக்காய்,பச்சை கற்பூரம்,1 குப்பை மேனி வேர் எடுத்து அதில் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து ஒரு சிறிய மூட்டை போல் கட்டி கொள்ளவும்.பின்னர் கடவுள் படங்கள் பக்கத்தில் வைத்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.மூட்டையில் உள்ள பொருட்களின் வாசம் குறைந்து விட்டால் மீண்டும் மாற்றி வைக்க வேண்டும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.