வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

0
154
Flights canceled due to weather! Passengers suffer!
Flights canceled due to weather! Passengers suffer!

வானிலை காரணமாக விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில்  மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி ,கல்லூரிகள் ,தொழிற்சாலை போன்றவைகள் வழக்கம் போல் தொடங்கியுள்ளது.விடுமுறை நாட்களில் மக்கள் சுற்றுலா போன்ற தலங்களுக்கும் சென்று வருகின்றனர் இந்நிலையில் அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால்.தினந்தோறும் அதிக அளவில் பயணிகள் செல்கின்றனர்.அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிதியாவை சேர்ந்தவர்களும் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

அந்தமானிற்கு செல்லும் விமானங்கள் எப்போதும் கூட்டமாகவே காணப்படும் .தற்போது அந்தமானில் வானிலை சரியாக இல்லாத காரணத்தால் அந்தமான் விமான நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடகின்றது.அதனால் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.மீண்டும் வழக்கம் போல் ஐந்தாம் தேதி சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

author avatar
Parthipan K