ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

0
31
#image_title

ஜார்கண்ட்டில் உறைவிடப்பள்ளியில் விஷமாக மாறிய உணவு!!! 150 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!!!

ஜார்கண்டில் செயல்பட்டு வரும் உறைவிடப்பள்ளி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் காவிரியில் உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று(செப்டம்பர்27) இரவு மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. அந்த இரவு உணவை சாப்பிட்ட 150 மாணவர்களுக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 150 மாணவர்களும் சிகிச்சை பெறுவதற்கு மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் ராம்பூர்ஹாட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு மாணவர் “உணவில் பல்கலையின் ஒரு பாகம் இருந்தது. இதனால் உணவு விஷமாக மாறி இருக்கும். இதை அறியாமல் நாங்கள் சாப்பிட்டதால் எங்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இதையடுத்து மாணவர் அளித்த தகவலை வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.