15 மீனவர்களின் விடுதலை விவரங்கள்!! முதல்வர்  வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!!

0
61
For the release of 15 fishermen!! Chief Minister's letter to the Minister of External Affairs!!
For the release of 15 fishermen!! Chief Minister's letter to the Minister of External Affairs!!

15 மீனவர்களின் விடுதலை விவரங்கள்!! முதல்வர்  வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை  எடுக்க கோரிக்கை வைத்த முதலவர் மு.க.ஸ்டாலின். மேலும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகின் மூலம்  மீன்பிடிக்க சென்ற மீனவர்களை  இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்தனர். அதனை தொடர்ந்தது புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்படினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு மூலம் மீன்பிடிக்க இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இலங்கை நீதிமன்றம் வழக்கை விசாரித்து  மொத்தம் 22 மீனர்வர்களை விடுதலை செய்தனர். ஆனால் அவர்களின் 4 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

அதனையடுத்து நேற்று மீன்பிடிக்க சென்ற 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்துள்ளர்கள். இந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு  ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டக்டார் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து,  இலங்கை  அகாரிகளுடன் தூதரக அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மேலும் மீனவர்களின் உரிமைகள், வழ்வாதாரங்களை  பாதுகாக்க வேண்டும் என்றும் குறிபிட்டுள்ளார். இது போன்று அடிக்கடி நடப்பதால் மீனவர்கள் இடையே அதிக அளவு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.