தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!! 

0
26
Paradoxically high fish prices!! Shocking information said by the fish market administrator that there is no possibility of reduction!!
Paradoxically high fish prices!! Shocking information said by the fish market administrator that there is no possibility of reduction!!

தாறுமாறாக உயர்ந்த மீன்விலை!! இனி குறைய வாய்ப்பில்லை மீன் மார்க்கெட் நிர்வாகி  கூறிய அதிர்ச்சி தகவல்!! 

வரத்து குறைவினால் மீன்களின் விலை திடீரென கிடுகிடுவென ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1400 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது அரபிக்கடல் பகுதியில்  மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளதால் வரத்து பாதிக்கப்பட்ட சூழ்நிலையால்  ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக எப்போதும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலமானது  ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அமல்படுத்தப்படும். அதன்படி கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வரத்து பாதிக்கப்பட்ட நிலையில் மீன்கள் விலை மளமளவென ஏறியது. தற்போது தடைக்காலம் ஓய்ந்தபின் மீன்கள் வரத்து சீரானதால் விலையும் குறைந்தது.

ஆனால் தற்போது அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீன் வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள மீன் மார்க்கெட் ஊர்களான காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப்பேட்டை, திருவான்மியூர், காவாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மீன்கள் விலை தாறுமாறாக இருந்த காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிலும் மக்கள் அதிகம் விருப்பப்படும் மீன் வகைகளான  வஞ்சிரம், வவ்வால் போன்ற மீன் வகைகள் அதிக விலை உயர்ந்து காணப்பட்டன. வஞ்சிரம் மீன் 1300 முதல் 1400 வரை விற்கப்பட்டது. அதேபோல் சங்கரா மீன் 700 முதல் 750 வரையிலும் வவ்வால் மீன் 800 முதல் 820 வரையிலும் விற்கப்பட்டது.

இறால் ரூ.600- வரையிலும், நண்டு ரூ.650 வரையிலும், கிழங்கான் மீன் ரூ.450 வரையிலும் விற்பனை ஆனது. இதர மீன்கள் விலையும் தாறுமாறாக உயர்ந்தே காணப்பட்டது. ஆனால்  மத்தி, ஊளி, கிளிச்சை போன்ற சிறிய அளவிலான மீன்கள் விலையில் பெரியளவில் மாற்றம் ஏதும்  இல்லை. 

விலை உயர்வால்மக்கள்  எந்த மீன்களை வாங்குவது என்று தடுமாறி போயினர். பின்னர் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மீன்களை வாங்கிச் சென்றனர். இந்த மீன்கள் விலை உயர்வு குறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை  கூறியதாவது,

சென்னை போன்ற மாநகரங்களுக்கு மக்களின் தேவைக்காக வெளி மாநிலங்களில் இருந்து மீன் கொண்டு வருவது வழக்கம். தற்போது அரபிக்கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டு இருப்பதால் மீன் வரத்து குறைந்துள்ளது இதன் காரணமாக விலையும் உயர்ந்துள்ளது. அதனால் தற்போது மீன் விலை குறைய வாய்ப்பு இல்லை. வரத்து  சீரானதும் மீன் விலையில் மாற்றம் உண்டாகும் என்று அவர் கூறினார்.

இந்த செய்தி மீன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.