இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்! 

0
90
For these classes only! Schools reopened!
For these classes only! Schools reopened!

இந்த வகுப்புகளுக்கு மட்டும்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்!

கொரோனா காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.தேர்வுகள் அனைத்து ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.அதன் பிறகு கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது. அந்த தேர்வானது கடந்த 23 தேதி முடிவடைந்தது.

அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று பள்ளி திறக்கப்பட்டுள்ளது.மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜனவரி ஐந்தாம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K