ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்!

0
117

ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக சொல்லி 10 லட்சம் மோசடி செய்த நபர்கள்!

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி செய்யும் விஷயம் பல ஆண்டுகளாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ரஜினிகாந்தின் 169 ஆவது படமாக ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான தயாரிக்கிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால் இந்த படத்துக்கு ரஜினிக்கு சம்பளம் கணிசமாகக் குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பெற்றோரிடம் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாகக் கூறி இரண்டு நபர்கள் 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். தெலுங்கின் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் பெயரை சொல்லி ரஜினியின் மகளாக நடிக்க தேர்வாகியுள்ளதாக நிலேஷா என்ற பெண்ணின் பெற்றோரிடம் பேசியுள்ளனர்.

இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த அவர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில சட்ட நடைமுறைகளுக்காக பணம் கட்டவேண்டும் என சொல்லி 10 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அதன் பிறகு அவர்களிடம் எந்த தகவலும் இல்லாமல் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து அந்த பெற்றோர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது சம்மந்தமாக மோசடி வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.