ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

0
208
#image_title

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள்! அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் வகையில் அதிமுக சார்பில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!

இலவசம் என்ற வார்த்தையை உபயோகித்தால் மக்கள் மனம் புண்பட்டு விடும் என்று இலவசம் என்னும் வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கே, ஓசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, இதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கருணாநிதி எப்படி வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றினாரோ அதேபோல் தான் அவருடைய மகன் மு.க ஸ்டாலின் தற்பொழுது வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி வருகிறார்.

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை, கஞ்சா புழக்கம் பெருகிவிட்டது மளிகைக்கடையில் கூட சாராயம் கிடைக்கிறது : அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக தோல்வியடையும்,மோசடிப் பேர்வழி இன்று முதலமைச்சராக வந்திருக்கிறார். ஒரு ஏமாற்று அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி , திருவொற்றியூர் தொகுதி (திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்) அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, மாதவரம் மூர்த்தி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் மாமன்ற உறுப்பினர் கே.கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 5775 ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள் , 3 சக்கர வண்டி, இஸ்திரி பெட்டி , வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக மேடையில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே குப்பன்.

இந்த நிகழ்ச்சி பல்வேறு முறை தள்ளி போனது. ஆனால் அதுவும் ஒரு நன்மைக்காக தான், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இது போன்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அது திருவொற்றியூரில் நடைபெறுவது கூடுதல் மகிழ்ச்சி . அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.

ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது தற்போது வரையிலும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை.

தற்பொழுது சட்டப்பேரவையில் தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதுவும் செப்டம்பர் மாதம் முதல் தான் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இப்படி தகுதி பார்த்து மக்கள் வாக்களித்து இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது.

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக தோல்வியடையும், மோசடிப் பேர்வழி இன்று முதலமைச்சராக வந்திருக்கிறார். ஒரு ஏமாற்று அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார்.

வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருந்தால் 1000 ரூபாய் கிடையாது என்று செப்டம்பர் மாதம் சொல்வார்கள். செப்டம்பர் மாதத்தில் கூட ஆயிரம் ரூபாய் தருவார்கள் என்று நம்ப முடியாது.

ஆட்சிக்கு வந்தால் டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் மூடுவதாக கூறினார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது ஒரு டாஸ்மார்க் கடையை கூட மூட வில்லை.

ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்தார் ஜெயலலிதா… அந்த அம்மா உணவகத்தை கூட மூட நினைக்கிறார்கள். 14 அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு புகார் உள்ளது இது போன்ற ஒரு அவல நிலையில் தான் திமுக ஆட்சி உள்ளது என்று கூறினார்.

பின்னர் மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது

தமிழகம் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அம்மா என்று கூறினால் ஜெயலாலிதா தான் என்றும் மக்களின் நினைவிற்கு வருவார்

அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சி கூட நினைத்து பார்க்காத அளவிற்கு இந்த கூட்டம் மாநாடு போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா எப்போதும் அவரது பிறந்த நாளன்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று கூறுவார். அந்த வகையில் 5775 பேருக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கப்படுகிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஏழைகளின் ஆட்சியாக இருந்தது. எனக்கென்று குடும்பம் வாழ்க்கை கிடையாது என்னுடைய வாழ்க்கை தவ வாழ்க்கை நான் வாழும் காலமெல்லாம் தமிழக மக்களுக்கு தான் என்று சொல்லி வாழ்ந்து மறைந்துள்ளார்.

இன்று அவர் இல்லை என்றாலும் எங்களையெல்லாம் வாழ வைத்த தெய்வம் அவர் அதிமுக ஆட்சி முடிந்து இரண்டு ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆளுங்கட்சி கூட இந்த அளவிற்கு விழாவை நடத்த முடியாது என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா நடைபெற்று வருகிறது.

தேர்தலுக்காக கொடுப்பது வாக்குறுதி அல்ல மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அரசின் கடமை மற்றவர்களைப் போல் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுவது அதிமுக இல்லை என்று கூறுவார்.

தாலிக்கு தங்கம் அதிமுக ஆட்சியில் 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. மக்களிடம் வாக்குகளை பெற்று எப்படியாவது ஆட்சிக்கு வந்தால் போதும் ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை பற்றியும், வாக்குறுதிகளை பற்றியும் கவலைப்படாமல் தற்போது ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த திட்டம் மக்கள் மனதில் இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து திட்டத்தையும் திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்.

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்திவிட்டார்கள் அதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்று சட்டமன்றத்தில் எடப்பாடி கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த திட்டத்தை நாங்கள் நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறுகிறார்கள்.

இலவசம் என்ற வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எங்கே, ஒசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு எப்படி கொடுத்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

அதனால் தான் இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்கு பதிலாக அரசி, சர்க்கரையை மட்டும் கொடுத்துவிட்டு ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். அதிலும் கரும்பு கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதன் பிறகு கரும்பு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தார் அதற்காக தான் கரும்பு வழக்குவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் சாராயம, மளிகை கடைகள் கூட கிடைக்கிறது. கஞ்சா எங்கே பார்த்தாலும் விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள. பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப கூட பெற்றோர்கள் பயப்படுகிறார்கள் பள்ளிக்கு வெளியே கூட கஞ்சா விற்பனை நடைபெறுகிறது.

கொலை கொள்ளை அடிப்பவர்களுக்கு தான் பாதுகாப்பு கொடுக்கிறது இந்த ஆட்சியில் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு கொடுக்கிறது அரசு. தமிழகத்திற்கு எங்கே பார்த்தாலும் கொலை நடைபெறுகிறது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது.

திமுக அரசு வந்துவிட்டது என்றால் ரவுடிகள் எல்லாம் வெளியே இருந்து உள்ளே வருகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளே இருக்கும் ரவுடிகள் எல்லாம் வெளியே சென்று விடுவார்கள்.

கருணாநிதி எப்படி வாக்குறுதி கொடுத்து அதை நிறைவேற்றமால் மக்களை ஏமாற்றினாரோ அதேபோல் தான் அவருடைய மகன் மு.க ஸ்டாலின் தற்பொழுது வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி வருகிறார்.

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு ரகசியம் வைத்திருக்கிறோம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள்.

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக 7.5% இட ஒதுக்கீட்டை எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தார் ஏனென்றால் அவரும் சாதாரண அரசு பள்ளியில் தான் பயின்றார் என்று கூறினார்.

author avatar
Savitha