சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி போதும்!!

0
297
#image_title

சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு செடி போதும்!!

சிறுநீர் சார்ந்த பிரச்சனைகளுக்கு மட்டுமில்லாமல் பல விதமான நோய்களுக்கும் நாயுருவி செடியின் இலைகள் பயன்படுகின்றது.

நாயுருவி செடியின் இலைகளின் பயன்கள்:

* காய்ச்சல் உள்ளவர்களுக்கு நாயுருவி செடியின் இலைகளை எடுத்து அதனுடன் மிளகு, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

* மூல நோய் உள்ளவர்களுக்கு நாயுருவி இலைக் கொழுந்தை பறித்து அதனுடன் சிறிது மஞ்ள் வைத்து அரைத்து மூலம் உள்ள இடத்தில் வைத்து கட்டி வர இதம் தரும்.

* வண்டுக்கடி, பிற பூச்சிக் கடிகள் குணமாக நாயுருவி இலைகளுடன் சம அளவு துளசி சேர்த்து அரைத்து நெல்லியளவு சாப்பிட வேண்டும்.

* நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் நாயுருவி இலைகளில் குடிநீர் செய்து பருகி வந்தால் பேதியாகும்.

* நாயுருவி செடியின் வேரினை எடுத்து பல் துலக்கினால் பல் தூய்மை ஆகும். முகம் வசிகரம் பெறும்.

* நாயுருவி வேரை உலர வைத்து பொடித்து சலித்து வைத்து இந்த பொடியால் பல் துலக்கினால் பற்கள் பலபலவென ஆகும்.

* வயிற்று வலி, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடையவர்கள் நாயுருவி இலைதளை கசாயமிட்டு அருந்தி வருவது நல்லது.

* சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறுதல், சிறுநீர்த்தாரையில் எரிச்சல், சிறுநீர் தடை போன்ற பிரச்சனைகள் உடையவர்கள் நாயுருவி சமுல விழுதை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.

* சிறுநீர் கடுப்பு இருந்தால் நாயுருவி செடியில் கதிர் விடாத இலையை எடுத்து இடித்து சாறு பிழிந்து அதன் சம அளவில் தண்ணீர் சேர்த்து மூன்று வேலையும் 3 மில்லி வரை சாப்பிட வேண்டும். இதற்கு பிறகு பாலை குடித்தால் தடைப்பட்ட சிறுநீர் வெளி வரும். மேலும் நச்சு நீர் வெளியேறும்.