முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!!

0
30
Former minister admitted to Avadi Hospital!! Exciting news!!
Former minister admitted to Avadi Hospital!! Exciting news!!

முன்னாள் அமைச்சர் ஆவடி மருத்துவமனையில் அனுமதி!! பரபரப்பு தகவல்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வின் இளைஞரணி செயலாளராக இருந்தது முதல் இன்று வரை முதல்வருக்கு மிகவும் உறுதுணையாக பக்கத்திலேயே இருந்தவர் ஆவடி ஆவார்.

இவர் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மாஃபா பாண்டியராஜனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சி ஆட்சி அமைத்தது.

இதில் ஆவடி நாசர் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.இவர் பதவி ஏற்ற பிறகு ஆவின் பால் விலையில் அதிகமான பிரச்சனைகள் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அமைச்சரைவையில் இருந்து ஆவடி நாசரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கினார்.இதுவரை ஒருமுறை கூட அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது இல்லை.

ஆனால் முதல் முறையாக ஆவடி நாசரை முதல்வர் அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.எனவே அடுத்து பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றார்.

இதற்கு பிறகு ஆவடி நாசர் வெறும் கட்சி தொடர்பான நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்தார்.இந்த நிலையில், முன்னாள் பால்வளத்துறை அமைச்சரான ஆவடி திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இவர் சென்னையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கு இவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இவருக்கு திடீரென்று உடம்பில் என்ன பிரச்சனை ஏற்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை. இவரின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை விரைவில் தகவல் அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

author avatar
CineDesk