பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சாப்பிட வேண்டிய நான்கு முக்கிய உணவுகள்! 

0
261
Four important foods that women should eat after delivery!
Four important foods that women should eat after delivery!
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் சாப்பிட வேண்டிய நான்கு முக்கிய உணவுகள்!
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் கட்டாயமாக சாப்பிட வேண்டிய நான்கு முக்கியமான உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை பெற்ற பெண்கள் அனைவரும் பிரசவத்திற்கு பின்னர் தங்களுடைய உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். விருப்பப்பட்ட உணவுகள் என்று கூறி தங்களுக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடக் கூடாது. இது மிகவும் ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் மிகவும் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் சத்துக்கள், புரதச்சத்துக்கள், கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டும்.
இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சாப்பிடும் பொழுது அவர்களுடைய உடல் வலிமை பெறும். தற்பொழுது பெண்கள் பிரசவத்திற்கு பிறகு சாப்பிட வேண்டிய நான்கு முக்கிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் சாப்பிட வேண்டிய நான்கு முக்கிய உணவுகள்…
* முட்டை
* பச்சை காய்கறிகள்
* ஓட்ஸ்
* உலர் பழங்கள்
முட்டை:
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் முட்டையை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முட்டையில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. முட்டையில் உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம் ஆகியவை நிறைந்துள்ளது. முட்டையில் உள்ள புரதச்சத்து உடலை வலிமைபடுத்துகின்றது.
பச்சை காய்கறிகள்:
பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் பச்சையாக சாப்பிடக்கூடிய காய்கறிகள் அனைத்தையும் சாப்பிட வேண்டும். இதனால் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது தடுக்கலாம். மேலும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகரிக்கும்.
ஓட்ஸ்:
பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் ஓட்ஸ் சாப்பிட வேண்டும். ஓட்ஸில் புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகிய உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. பிரசவத்திற்கு பிறகு பெண்கள் ஓட்ஸ் சாப்பிடுவதால் அவர்களுடைய செரிமான அமைப்பு வலிமையாகும்.
உலர் பழங்கள்…
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் உலர் பழங்களையும் கட்டாயமாக சாப்பிட வேண்டும். உலர் பழங்களிலும் கால்சியம், வைட்டமின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. பிரசவத்திற்கு பின்னர் பெண்கள் உலர் பழங்களை சாப்பிடுவதால் அவர்களின் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கின்றது. மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.